என் மௌனத்தின்
ஒவ்வொரு பக்கமும்
அமைதியால் நிரப்பப்பட்டிருக்கிறதென
நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்…
ஒவ்வொரு பக்கமும்
அமைதியால் நிரப்பப்பட்டிருக்கிறதென
நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய்…
ஆனால், உன் மீதான வன்மம்,
கோபம், சொல்லக்கூடாத
வார்த்தைகள் அனைத்தையும்
இந்த மௌனம் தன் வலிமையால்
ஒரு மாபெரும் அமைதியாக மாற்றி
அதை உன்னிடமும் கடத்துகிறது…
கோபம், சொல்லக்கூடாத
வார்த்தைகள் அனைத்தையும்
இந்த மௌனம் தன் வலிமையால்
ஒரு மாபெரும் அமைதியாக மாற்றி
அதை உன்னிடமும் கடத்துகிறது…
உனக்கு நான் நன்றி சொல்வேன்…
உன் கோபமான, உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள்
அனைத்தையும் தனக்குள் வாங்கி
கொன்று குவித்து, பின் அமைதி கலந்த
புன்னகையொன்றை வெளிப்படுத்தும் – என்
மௌனத்தின் வலிமையை நான்
கண்டுணர்ந்ததற்காக, - நான் மீண்டும் மீண்டும்
நன்றி சொல்லிக் கொண்டேயிருப்பேன்…
உன் கோபமான, உணர்ச்சி ததும்பும் வார்த்தைகள்
அனைத்தையும் தனக்குள் வாங்கி
கொன்று குவித்து, பின் அமைதி கலந்த
புன்னகையொன்றை வெளிப்படுத்தும் – என்
மௌனத்தின் வலிமையை நான்
கண்டுணர்ந்ததற்காக, - நான் மீண்டும் மீண்டும்
நன்றி சொல்லிக் கொண்டேயிருப்பேன்…
No comments:
Post a Comment