
மாலையின் நிழலில்
உன் கைகோர்த்து நடக்கிறேன்.
உன் இடைவிடா மௌனம்
உன் உள்ளங்கையின் அதிர்வின் வழி
என் ஞாபகத்தை கலைக்கிறது.
காற்றின் மெல்லிய விரல்கள் பட்டு
உன் கேசம் என் முகத்தில்
விளையாட
ஒதுக்கிவிட உனக்கும் தோன்றவில்லை
தடுத்துவிட எனக்கும் மனமில்லை.
காற்றின் வேகம் அதிகரிக்க
கருமேகத்தின் அடர்த்தி - வானில்
காதலின் அடர்த்தி - நம் மனதில்
ஒரு துளி விழுந்து நம் கைவிரல்களின் - வழி
இருவரின் உள்ளங்கைகளுக்கு
இடையில் நகர்கிறது.
அந்த ஒரு துளியின் பயணத்தை
தொடர்ந்து சில துளிகள். பின் பல துளிகள்
இடைவிடாமல் வந்த மழைத்துளிகளால்
நமக்குள் இடைவெளியில்லாமல் போனது.
உன் மூச்சிக்காற்றின் வெப்பம்
என் முகத்தில் இழைய
என் விடுதலை உணர்வுகள்
வெப்பம் கொண்டன.
வெளியே மழையின் குளிர்
நம்மை விழுங்கி கொண்டிருக்கிறது.
உள்ளே வெப்பத்தின் வேர்கள்
என்னை உன்னோடு எரிக்க ஆரம்பிக்கிறது.
1 comment:
mathi,intha mathiri kadal, kalavi innu elutharatha vittutu ethavathu urupadiya pannalame....
Post a Comment