Friday, October 30, 2015

கோபம்

எரிச்சலின் மிகுதியில்
கட்டுக்கடங்கா கோபம் ஒன்று
என்னுள் வருகிறது...
என் முன் இருக்கும்
புத்தகத்தை தூக்கி வீசுகிறேன்..
பூமியை உதைக்கிறேன்...
காற்றில் கைளை வீசி
சுவரில் குத்துகிறேன்...
இன்னும் ஆற்றாமை தாங்காமல்
என் டேபிளில் இருந்தவையெல்லாம்
கீழே தள்ளி பின் ஒவ்வொன்றையும் எடுத்து
என் ரூம் முழுவதும்
வீசிக் கொண்டேயிருக்கிறேன்.
கையில் கிடைத்ததெல்லாம்
அள்ளி வீசிப் பார்க்கிறேன்...
ஆனால்
கடைசி வரை என்னுள் பிறந்த
அந்த கோபத்தை அள்ளி
வெளியே வீச முடியவில்லை...

Saturday, October 24, 2015

வரமா சாபமா ?

நீ வரமா
இல்லை சாபமா
நீ வரும் போது
புன்னகை புரிந்தால் அது வரம்
முறைத்தால் அது சாபம்
நீ என்னை
பார்த்தால் அது வரம்
பாராமுகம் காட்டினால் - அது சாபம்
நீ என்னுடன்
பேசினால் அது வரம்
மௌனமாய் சென்றால் - அது சாபம்
நீ தனியாக
நடந்து வந்தால் - அது வரம்
இன்னொருவனுடன் உரசி உரசி
வந்தால் - அது சாபம்
. . .
நீ என்னை காதலித்தால்
அது வரம்...
என்னை காதலிக்கா விட்டால்
அதுவும் எனக்கு வரம்தான்...
ஏனெனில் - உன் மேல்
நான் கொண்ட காதல்
என்சாபங்கள் அனைத்தையும்
வரமாய் மாற்றும்
வல்லமை பெற்றது.

Friday, October 23, 2015

உனக்கான நேரம்

இது உனக்கான நேரம்
அவ்வளவுதான்...

பயன் படுத்துகிறாயோ - இல்லையோ
என்பதை பற்றியெல்லாம்
அந்த நேரத்திற்கு கொஞ்சம் கூட
கவலையில்லை...

நேரம் - அது
ஒரு போதும் நீ அதை
செவ்வனே பயன்படுத்துகிறாய்
என மகிழ்ந்ததுமில்லை.
மாறாக நீ அதை
பயன்படுத்தவில்லை என
வருத்தப்பட்டதுமில்லை.

உனக்கான நேரம்
உன்னைவிட்டு சீக்கிரம்
நகராது - அதே சமயம்
உன்னுடனே எப்போதும் இருக்காது.

ஏனெனில்

உனக்கான நேரம்
உன்னுடன் இருக்க வேண்டிய
காலம் மட்டும் உன்னுடன்
இருந்துவிட்டு பின் உன்னை விட்டு
நகர்ந்துவிட கடமைப்பட்டது..

மீண்டும் சொல்கிறேன் !!!

இது உனக்கான நேரம்
அவ்வளவுதான் - அது உன்
உயிர் இருக்கும் வரை
உன்னுடன்-தான் இருக்கும். 

Wednesday, October 21, 2015

வலிமை உன்னுள் இருக்க கடவதாக

என் மௌனங்களில்
நிறைந்திருக்கும் வன்மங்களில்
ஒன்றாக நீயும் இருக்கிறாய்...
நல்லதொரு சந்தர்ப்பமல்ல...
உனக்கான மிக மிக மோசமானதொரு
சந்தர்ப்பத்திற்காக
நான் காத்திருக்கிறேன்...
என்னை கடக்கும் போதும்
என்னை பார்க்கும் போதும்
உன் பார்வையின் அலட்சியம்
உன் புன்னகையின் ஏளனம்
... ... ...
மீண்டும் மீண்டும்
உன் எல்லாவற்றையும்
என் மௌனத்தின் கூர்வாள்களாக
சேமித்து வைக்கிறேன்...
நான் வேண்டுவன
என்பதெல்லாம் யாதெனில்
என் கூர்வாள்கள்
உன்னை நோக்கி வீசப்படும் போது
அதை தாங்கிக் கொள்ளும்
தாராளமான வலிமை உன்னுள்
இருக்கக் கடவதாக...